அணு ஒப்பந்தம் ஈரானுக்கு அமெரிக்கா நெருக்கடி
அணு சக்தி ஒப்பந்த முன்மொழிவுகளை அமெரிக்க அரசு நிர்வாகம், ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ளது; உடனடியாக கையெழுத்திட வருமாறு நெருக்கடி கொடுத்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் உடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து, 2018ல் அமெரிக்கா விலகியது. தற்போது அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப், அப்போதும் அதிபராக இருந்தார்.
இந்நிலையில், ஈரான், அதிகளவில் அணு ஆயுதங்களை தயாரித்தது. மேலும், அந்த நாட்டிடம், அணு ஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் அதிகளவில் உள்ளது.
இது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால், ஈரானுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்ய டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
அணு ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது. அந்த நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்பது, அமெரிக்காவின் புதிய ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.
இது தொடர்பாக ஈரானுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார் டிரம்ப்.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்திற்கான முன்மொழிவை அமெரிக்கா அனுப்பியுள்ளது; உடனடியாக கையெழுத்திடும்படி நெருக்கடி கொடுத்துள்ளது.