Wednesday, April 16, 2025
Uncategorized

2வது நாளாக தேனியில் வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி, நவ. 23: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதுமன்றத்திற்கு முன்பாக தேனி வக்கீல்கள் சங்கம் சார்பில், ஓசூரில் வக்கீல்.கண்ணனை நீதிமன்ற வளாகத்தில் வெட்டி கொலை செய்ய முயன்றதை கண்டித்து 2 வது நாளாக நேற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

செயலாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, ஓசூரில் வக்கீல்.கண்ணன் நீதிமன்ற வளாகத்தின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *