கோயில்களில் சங்காபிஷேக பூஜை
பெரியகுளம்: கார்த்திகை மூன்றாவது வாரத்தை யொட்டி பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் காலை, மாலை இருவேளை பூஜை நடந்தது.
சிவன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சியளித்தார். பாலசுப்பிரமணியர் கோவிலில் 108 சங்காபிஷேக பூஜை, வரசித்தி விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேக பூஜை, தையல் நாயகி வைத்தீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தேவாரம்:தேவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை திங்களை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.