Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

ஐயப்பன் மணி மண்டபத்தில் படிபூஜை : பக்தர்கள் பங்கேற்பு

சின்னமனுார்: சின்னமனுார் ஐயப்பன் மணி மண்டபத்தில் 18 படி பூஜை, மண்டல பூஜை நிகழ்ச்சிகள் நடந்தது. திரளாக ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.

சின்னமனுார் ஐயப்ப பக்த பஜனை சபை சார்பில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடந்தது.

தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஐயப்பன் மணி மண்டபத்தில் உள்ள 18 படிகளுக்கு படி பூஜை நடத்தப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படிகளுக்கு பூஜைகள் நடந்தன.

ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் குருசாமிகளால் நடத்தப்பட்டது. நேற்று காலை மண்டலாபிஷேக பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் இந்த பூஜையில் பங்கேற்றனர். மாலை சுவாமி ரத ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. திரளான பொது மக்கள் திரண்டு நின்று, சரண கோஷமிட்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஐயப்பா சேவா சங்கத்தின் தலைவர் பெருமாள், குருசாமி லோகேந்திரராசன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *