குமுளியில் முள்ளம் பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது
கூடலுார்: கேரளா குமுளி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாடிய 2 பேரை கேரள வனத்துறையினர் கைது செய்தனர்.
குமுளி அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டத்தில் முள்ளம் பன்றியின் உடல் பாகங்கள் இருந்ததை வனத்துறையினர் கைப்பற்றினர்
. இது தொடர்பாக ரேஞ்சர் ஜோசப் தலைமையிலான வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அனக்குழியைச் சேர்ந்த ஸ்டீபன் 56, ராஜன் 41, ஆகியோர் கம்பி வலை அமைத்து முள்ளம் பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது. இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த முள்ளம்பன்றி கறியை பறிமுதல் செய்தனர்.