‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாம்
தமிழகத்தில் மாதத்தின் மூன்றாவது புதன்கிழமையில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடத்தப்படுகிறது.
இம்மாதம் 3வது புதன் (ஜூலை 17) அரசு விடுமுறை யாக உள்ளது. தேனி மாவட்டத்தில் ஜூலை 18 ல் போடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் இம்முகாம் துவங்கி ஜூலை 19 காலையில் நிறைவடைகிறது. முகாமில் கலெக்டர் பொது மக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறுதல், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.