காட்டு யானைகளால் 136 தென்னை மரங்கள் சேதம்
கடமலைக்குண்டுவில் காட்டு யானைகள் 136 தென்னை மரங்களை சேதப்படுத்தியது.
குமணன்தொழு ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் பின்புறம் ஏழுசுணை பகுதியில் நேற்று அதிகாலை கூட்டமாக யானைகள் வந்தன.
இங்கு மேலப்பட்டி ராமராஜின் 67, என்பவரின் ஆறு ஏக்கர் பட்டா நிலத்தில் 2 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட 130 தென்னை மரங்களையும், அதேப்பகுதியில் குருபாரதியின் தோட்டத்தில் 6 தென்னை மரங்கள் என 136 மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தின. இது குறித்து கண்டமனுார் வனத்துறையினர் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்குளுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.