மாணவ, மாணவிகள் மாவட்ட யோகாசன போட்டி ஆர்வம்
கம்பம்: கம்பத்தில் நடந்த மாவட்ட யோகாசன போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர்.
கம்பத்தில் தி ஹிமாலயா யோகா பள்ளி சார்பில் நடத்திய யோகா போட்டியில் 400 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். வயது வாரியாக போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் மாணவ, மாணவிகள் பல்வேறு ஆசனங்களை செய்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றவர்கள், மாநில யோகா போட்டிகளில் பங்குபெற உள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இப் போட்டிகளை மாநில யோகா கூட்டமைப்பின் செயலர் ராமகிருஷ்ணன் நடத்தினார்.
நடுவர்களாக யோகா ஆசிரியர்கள் ஆனந்த், மேனகா, கருப்பசாமி, தருண் செயல்பட்டனர். நிகழ்ச்சியில் சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.