Saturday, June 7, 2025
மாவட்ட செய்திகள்

மேகமலை சின்னச் சுருளி அருவியில் குளிக்க தடை

கடமலைக்குண்டு : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் மேகமலை சின்னச் சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இரு நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

கடமலைக்குண்டில் இருந்து 10 கி.மீ.,மீ தூரத்தில் உள்ளது மேகமலை சின்னச்சுருளி அருவி. தேனி மாவட்டம் உள்பட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்

அருவியில் குளிப்பதற்காக வந்து செல்கின்றனர். பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகள் அருவியல் குளிப்பதற்கு வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.

அருவியில் நீர் வரத்து குறைந்து ஆபத்தான சூழல் மாறியதும் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *