போடியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்
தேனி: போடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நாளை(டிச.18), நாளை மறுநாள்(டிச.,19) காலை வரை 9:00 மணிவரை உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம் நடக்கிறது. தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் கலெக்டர் தலைமையில் அரசுத்துறை மாவட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் குறைகள், புகார்களை மனுக்களாக போடி தாலுகா அலுவலகத்தில் நாளை மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை கலெக்டரிடம் நேரில் வழங்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.