வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு ‘கெட்டிமேளம்’ முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஹோம பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகள் உபயதாரர்கள், அர்ச்சகர் கண்ணன் தலைமையிலான அர்ச்சகர்கள் குழுவினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.