காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்கள் : சீரமைக்க கோரிக்கை
போடி : போடி நகர் பகுதியில் திருட்டு, ஈவ் டீசிங் குற்றங்களை தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறிய பஸ்ஸ்டாண்ட், தேவர்சிலை, கட்டபொம்மன் சிலை, பரமசிவன் கோயில் ரோடு, பி.ஹைச்., ரோடு, நகைக்கடை பஜார், கருப்ப சுவாமி கோயில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரூ.2 லட்சம் செலவில் 30 கேமராக்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்டன.
போடி காமராஜ்பஜார் மெயின் ரோட்டில் நடந்து சென்ற நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி பகலில் கொள்ளையர்கள் நகை பையை பறித்து சென்ற சம்பவம் கண்காணிப்பு கேமரா மூலம் தெரிய வந்தது. இதனால் குற்றவாளியை போலீசார் உடனே கைது செய்ய உதவியாக இருந்தது.
அதன் பின் கண்காணிப்பு கேமராக்களை பராமரிக்காததால் பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது. குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர எஸ்.பி., நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்