Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கித் தருவதாக 33 பேரிடம் ரூ.1.11 கோடி மோசடி கம்பம் பெண் கைது

தேனி,: அரசு வேலை வாங்கித் தருவதாக 33 பேரிடம் ரூ.1.11 கோடி மோசடி செய்த வழக்கில் தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த சரண்யா 34, வை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம் தென்கரை பொறியாளர் சுந்தரவிக்னேஷ். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.இவர் தேனி எஸ்.பி.,யிடம் புகாரளித்தார். அதில், எனது சகோதரி திவ்யா, அவரின் தோழி செல்வராதா.இருவரும் தனியார் பள்ளி ஆசிரியைகள். பழனிசெட்டிபட்டி கே.எம்.சி., கார்டனை சேர்ந்த கனகதுர்கா கல்வித்துறையில் இணை இயக்குனராக பணியாற்றுகிறேன் எனக்கூறி திவ்யாவிற்கு ஆசிரியர் வேலையும், செல்வராதாவிற்கு கணினி ஆய்வாளர் வேலையும்வாங்கித் தருகிறேன் என கூறினார்.

இதனை நம்பிய செல்வராதா, திவ்யா தனது நண்பர்கள் இஜாஜ்அகமது, பாண்டி, பாலஸ்ரீகோகுல் ஆகியோர் கனகதுர்காவிடம்வங்கிக்கணக்கு மூலம் ரூ.33 லட்சம் வழங்கினர்.

அதுபோல் இ.புதுப்பட்டியை சூர்யா, கம்பம்வடக்குப்பட்டியை சேர்ந்த சரண்யா ஆகியோர் சேர்ந்து, மேலும் 26 பேரிடம் ரூ.78.21 லட்சம்என ரூ.1 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் பெற்று மோசடி செய்துவிட்டனர். இதனால் கனகதுர்கா, சூர்யா, சரண்யா மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவில், மாவட்டகுற்றப்பிரிவு போலீசார் மூவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் இன்ஸ்பெக்டர் மாயராஜலட்சுமி தலைமையிலான போலீசார் செப். 30ல் கனகதுர்காவை கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுஇருந்த சரண்யாவை நேற்று கைது செய்து தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *