Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

வைகை அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு

ஆண்டிபட்டி:வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து உள்ளது.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 2ம் போக பாசனத்திற்கு டிச. 18ல் வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் தொடர்கிறது.

அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடியாக இருந்த நீர் வெளியேற்றம் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 65.35 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1095 கன அடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *