ஒரே நாளில் 1.74 லட்சம் டோக்கன் வினியோகம்
தேனி: பொங்கல் பரிசு தொகுப்பு ஜன.9 முதல் வழங்கி, ஜன.,13க்குள் முழுவதும் கொடுத்து முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்டத்தில் நேற்று இதற்கான டோக்கன் வழங்கும் பணிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 74 ஆயிரம் காரடுதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது என வழங்கல்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.