அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க கூட்டம்
தேனி: அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் தேனி மாவட்ட கூட்டம், வீரபாண்டியில் நேற்று(ஜன., 7) நடந்தது.
கூட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு டி.ஏ., உயர்வு வழங்க கோரிய நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக அமல்படுத்த கோரியும், ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலனை உடனடியாக வழங்க கோரியும், 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்து உடனடியாக பேச வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதிய உறுப்பினர்களின் சேர்க்கையும் நடைபெற்றது.