முதல்வர் திறனறித் தேர்வில் 1888 மாணவர்கள் பங்கேற்பு
தேனி : மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான முதல்வர் திறனறித் தேர்வில் 1888 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 57 பேர் ‘ஆப்சென்ட்’ ஆகின
பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு திறனறித்தேர்வு நேற்று 8 மையங்களில் நடந்தது. தேர்வு எழுத 97 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 1945 மாணவர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். தேர்வினை 1888 மாணவர்கள் எழுதினர், 57 பேர் ‘ஆப்சென்ட்’ ஆகினர். தேர்வு காலை, மதியம் என இரு பகுதிகளாக நடந்தது. மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டிற்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.