வாகன விபத்தில் பெண்ணின் கால் விரல் துண்டிப்பு
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே டி.காமக்காபட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் மனைவி லிஷா 22. இருவரும் டூவீலரில் வத்தலகுண்டு சென்று கொண்டிருந்தனர். மற்றொரு டூவீலரில் லிஷா தம்பி பிரியதர்ஷன் 18. ஓட்ட அவரது தந்தை சேகர்
பின்னால் உட்கார்ந்து வந்தார். காட்ரோடு பிரிவு அருகே முன்னால் சென்ற ஈஸ்வரன் டூவீலர் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் லிஷாவிற்கு வலது காலில் ஒரு விரல் துண்டானது.
மதுரை தனியார் மருத்துவமனைக்கு லிஷா அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்திய கொடைக்கானல் உகர்த்தே நகரைச் சேர்ந்த டிரைவர் ராஜாராமிடம் 47. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-