24 பேருக்கு பணி ஆணை வழங்கல்
தேனி: தேனி பெருந்திட்ட வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட அலுவலர் ரமாபிரபா நேர்முகத் தேர்வை துவக்கி வைத்தார்.
பதினாறு நிறுவனங்களை சேர்ந்த மனித வள மேலாளர்கள் பங்கேற்று நேர்முக தேர்வு நடத்தினர். இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், பங்கேற்ற நிலையில் முதற்கட்டமாக 24 பேருக்கு பணி ஆணைகளை மாவட்ட அலுவலர் வழங்கினார்.இவர்களுக்கு ஒரு வாரத்தில் பணிக்கு செல்ல உள்ளனர்.