மின் கம்பங்களில் விளம்பரம் செய்த மேலாளர் கைது
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி மெயின் ரோட்டில் உள்ள மின் கம்பங்களில் தனியார் நிறுவனம் சார்பில் அனுமதி இன்றி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.
ஆண்டிபட்டி நகர் மின்வாரிய உதவி பொறியாளர் தீபா இது குறித்து ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து விளம்பர போர்டுகள் வைத்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர் முருகனை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்