Saturday, June 7, 2025
மாவட்ட செய்திகள்

வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்

ஆண்டிபட்டி: மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் முறைப்பாசன அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்காக கால்வாய் வழியாக டிச. 18 முதல் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு தற்போது முறைப்பாசனம் நடைமுறையில் உள்ளது. பிப். 19ல் அணையில் இருந்து கால்வாய் வழியாக வினாடிக்கு 600 கன அடி நீர் திறக்கப்பட்டது. மறுநாள் 650 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

நேற்று காலை 6:00 மணிக்கு கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி – -சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. அணை நீர்மட்டம் 62.01 அடி( மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 79 கன அடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *