Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு டார்ச்சர் கூலித் தொழிலாளிக்கு 25 ஆண்டு சிறை

தேனி, பிப். 28: தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுருளிவேல்(42). இவர் தேங்காய் வெட்டும் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு 6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தார். இதுகுறித்து, சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியதையடுத்து, பெற்றோர் குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் அளித்தனர். குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினர் விசாரணை நடத்தி பரிந்துரைத்ததையடுத்து, உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார், சுருளிவேலை போக்சோவில் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கணேசன் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வக்கீல் ரஷீதா ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, நேற்று நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் குற்றவாளி சுருளிவேலுக்கு 25 ஆண்டு தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *