Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

ரயில்வே ஸ்டேஷன் முற்றுகையிட முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம்

தேனி: இந்திய கம்யூ., கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி ரயில்வே ஸ்டேஷனை முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதற்கு முன்நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் விக்னேஷ், துணைச் செயலாளர் ஜெய்ஹிந்த் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் தமிழ்பெருமாள் பேசினார். தேனி இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, ஜவஹர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இவர்கள் மீது தேனி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *