126.30 அடியாக உயர்ந்தது பெரியாறு அணை நீர்மட்டம் -தொடர் மழையால் மேலும் உயரும் வாய்ப்பு
முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்மட்டம் 126.30 அடியாக உயர்ந்தது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 126.30 அடியை எட்டியது (மொத்த உயரம் 152 அடி).
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4271 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1267 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3898 மில்லியன் கன அடியாகும். பெரியாறில் 28.4 மி.மீ., தேக்கடியில் 16.4 மி.மீ., மழை பதிவானது. நேற்று பகல் முழுவதும் நீர்ப் பிடிப்பில் மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது.