Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை பணியாளர்கள் தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி : தேனியில் ரேஷன் பணியாளர்களை அவமரியாதையாக பேசியதாகவும், மாற்று சங்கத்தில் சேர வற்புறுத்தும் தேனி வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்க செயலாட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

மாநிலத்தலைவர் ஜெயசந்திரராஜா முன்னிலை வகித்தார்.

மாநில பொருளாளர் பொன் அமைதி, மாவட்ட தலைவர் மகாலிங்கம், நிர்வாகிகள் பன்னீர் செல்வம், பாண்டி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *