Saturday, June 7, 2025
மாவட்ட செய்திகள்

கம்பம் -வேலப்பர் கோயிலில் யாகசாலை பூஜை நாளை துவக்கம்

கம்பம் சுருளி – வேலப்பர் என்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஆக. 22 ல் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை ஒட்டி நாளை யாகசாலைகளில் வேள்விகள் துவங்குகிறது.

கம்பத்தில் வேலப்பர் கோயில் வீதி, காந்திஜி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது சுருளி வேலப்பர் என்ற சுப்பரமணிய சுவாமி கோயில். இங்கு மூலவராக பாலதண்டாயுதபாணியும், வள்ளி தெய்வானை தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். பழமையும், புராதன பிரசித்தி பெற்ற இக் கோயிலில் சஷ்டி, தைப் பூச நாட்களில் அதிகளவில் பக்தர்கள் கூடுவார்கள். வேலப்பர் கோயில் திருப்பணிகள் பல மாதங்களாக நடைபெற்று, ஆக. 22 ல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கென கோயிலிற்கு முன் அமைக்கப்பட்டுள்ளது யாக சாலை பூஜைகள் நாளை துவங்குகிறது.

விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. நாளை மாலை புனித நதிகளிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு தீர்த்த கலசங்கள் மற்றும் முளைப்பாரி நகர் வலம் வருதல் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து ஆக . 20 ல் முதற்கால யாக வேள்விகள் துவக்கி, சுவாமிகளை திருக் குடத்துக்குள் எழுந்தருள செய்தல். ஆக 21 ல் 2ம் கால யாக வேள்விகளை தொடர்ந்து சிலைகள் பிரதிஷ்டை , மாலை 6 மணிக்கு 3ம் கால யாக வேள்விகள் துவக்குகிறது. ஆக. 22 ல் 4ம் கால யாக வேள்விகளுடன் கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை தொட்டு துலக்குதல், உயிர் ஊட்டுதல் நடைபெறும், தொடர்ந்து பேரொளி வழிபாடு, புனித நீர் குட யாத்திரை அனுமதி பெறுதல் செய்யப்படும். காலை 9:30 முதல் 10:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.

இதற்கென கோயில் எதிரில் வேலப்பர் கோயில் வீதியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வீதி மட்டுமின்றி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

கும்பாபிஷேகத்தை தெத்துப் பட்டி ராஜகாளியம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் ஜவஹர் என்ற சதாசிவ குருக்கள் செய்து வைக்கிறார். கும்பாபிநேகத்திற்கான ஏற்பாடுகளை கோயிலின் முருக பக்த சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *