கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது; 175 லிட்டர் பறிமுதல்
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பன்சோலை அருகே வட்டப்பாறையில் கள்ளச்சாராயம் காய்ச்சியவரை கைது செய்த கலால் துறையினர், 175 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கேரளாவில் ஓணம் பண்டிகை நெருங்குவதால் கள்ளச்சாராயம், போலி மது, கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில், கலால் துறையினர் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உடும்பன்சோலை அருகே வட்டப்பாறை வனத்தில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்தது. அடிமாலி போதைப்பொருள் தடுப்பு துறை உதவி இன்ஸ்பெக்டர் திலீப் தலைமையில், அதிகாரிகள் வட்டப்பாறை வனப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.
அதில், அதே பகுதியைச் சேர்ந்த அருண், 28, சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதைஅடுத்து, அவரை கைது செய்து, 175 லிட்டர் சாராயம், உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.