சுருளி அருவியில் குளிக்கத்தடை
சுருளி அருவியில் யானைக் கூட்டம் ஒன்று முகாமிட்டிருப்பதாக கூறி சுருளி அருவியில் நேற்று காலை முதல் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் தினமும் நூற்றுக்கணக்கில் வருகின்றனர். மேகமலை புலிகள் காப்பகமாக மாறிய பின், வனத்துறையின் கெடு பிடிகளும் அதிகரித்துள்ளன. கடந்த 2 மாதங்களில் 15க்கும் மேற்பட்ட முறை யானைகள் நடமாட்டம் இருப்பதாக கூறி சுருளி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
அருவிக்கு செல்லும் பாதையில் கருப்பசுவாமி கோயில் அருகில் 4 யானைகள் கொண்ட கூட்டம் நின்றிருப்பதை நேற்று காலை வளத்துறையினர் பார்த்துள்ளனர். இதனால் பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது. யானைகள் கூட்டம் நடமாடி வருவதால், அருவியில் குளிக்கத் தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது.