Saturday, June 7, 2025
மாவட்ட செய்திகள்

அண்ணாமலை உருவபொம்மை எரிப்பு

தேனி வீரபாண்டி போலீஸ் குடியிருப்பு அருகே அ.தி.மு.க, சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியை அவதுாறாக பேசிய, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடந்தது.

தேனி மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் திருமூர்த்தி, பொருளாளர் முருகன் முன்னிலை வகித்து, அண்ணாமலை உருவ பொம்மை எரித்து, பா.ஜ.,விற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். தேனி அ.தி.மு.க., மேற்குமாவட்ட மாணவரணி நிர்வாகி பரத்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனுமதி இன்றி உருவபொம்மை எரித்த 17 பேரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *