Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை தபால் கோட்டம் திருப்பரங்குன்ற தபால் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் தபால்காரர் சுமதி தற்கொலைக்கு காரணமான வட்டார தபால் ஆய்வாளர் தீபராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தேனி தபால் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள், அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் எழுத்தர் பிரிவின் மாவட்டச் செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் செல்லத்துரை, தெய்வராஜ் பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *