மரக்கன்றுகள் நடவு
பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியும், தாமரைக்குளம் பேரூராட்சியும் இணைந்து, தாமரைக்குளம் கண்மாயில் 1054 மரக்கன்றுகளை நட்டனர்.
கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். தங்கதமிழ்செல்வன் எம்.பி., முன்னிலை வகித்தார். சரவணக்குமார் எம்.எல்.ஏ., ஜெ.ஏ., கல்லூரி முதல்வர் சேசுராணி, செயலர் சாந்தாமேரி ஜோஷிற்றா, இல்லத்தலைமை சகோதரி பாத்திமா மேரி சில்வியா, தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், செயல்அலுவலர் ஆளவந்தார், மாணவிகள் பங்கேற்றேனர்.