கானா பாடகியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில், ‘ சுவாமி ஐயப்பனை குறித்து அவதுாறு பாடலை பாடி வெளியிட்ட கானா பாடகி இசைவாணியை’ கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பின் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
மாவட்ட செயலாளர்கள் ராஜேஷ், இளங்கோபிரதாப், செயற்குழு உறுப்பினர் மணிபிரபு, துணைச்செயலாளர் சுப்பையா, துணைத்தலைவர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள உடனிருந்தனர்.