பெண்கள் தேனியில் ஆர்ப்பாட்டம்
தேனி : கலெக்டர் அலுவலகம் முன் ஆண்டிபட்டி தேன் சுடர் பெண்கள் இயக்க தலைவர் சரிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரினர்.
ஆர்ப்பாட்டத்தில் ராமகிருஷ்ணாபுரம், பாலக்கோம்பை, அழகாபுரி, முதலக்கம்பட்டி, கொத்துப்பட்டி, கோத்தலுத்து உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.