Friday, July 25, 2025
மாவட்ட செய்திகள்

பாலம் கட்டும் பணி ‘ஹெட் ஒர்க்ஸ்’ அணை அருகே துவக்கம்

மூணாறு : பழைய மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணை அருகே முதிரைபுழை ஆற்றின் குறுக்கே ரூ.6.80 கோடி செலவில் பாலம் கட்டும் பணி துவங்கியது.

மூணாறு அருகே போதமேடு பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வரும் நிலையில், தங்கும் விடுதிகள் நூற்று கணக்கில் உள்ளன. மூணாறில் இருந்து போதமேட்டிற்க்கு பழைய மூணாறு பகுதியில் உள்ள ஹெட் ஒர்க்ஸ் அணைக் கட்டு வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. அணையின் பாதுகாப்பு கருதி கன ரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. நாளடைவில் அணைக்கட்டு வழியாக வானகங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதால், அங்கு பாலம் கட்ட வேண்டும் என போதமேடு பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த பட்ஜெட்டில் பாலம் கட்டுவதற்கு அரசு ரூ.6. கோடி நிதி ஒதுக்கியது.

பாலம் கட்டுமானம் தொடர்பாக மதிப்பீடு செய்தபோது நிதி போதாது என தெரிய வந்ததால் மேலும் ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டது.

அந்த நிதியை பயன்படுத்தி போதமேடு ரோட்டை கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் வகையில் ஹெட் ஒர்க்ஸ் அணை அருகே முதிரைபுழை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி துவங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *