வைகை அணையில் மீண்டும் நீர் திறப்பு : மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்காக
ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக முறைப்பாசன அடிப்படையில் மீண்டும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் இருபோக பாசன நிலங்களுக்கு ஜூலை 3, திருமங்கலம் பிரதான கால்வாய் ஒருபோக பாசன நிலங்களுக்கு செப். 15ல் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது.
கடந்த சில வாரங்களாக முறைப்பாசனம் நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து டிச.7ல் கால்வாய் வழியாக நிறுத்தப்பட்ட நீர், நேற்று காலை வினாடிக்கு 1130 கன அடி வீதம், மீண்டும் நீர்திறந்து விடப்பட்டது.
மதுரை, தேனி, ஆண்டிபட்டி,- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வழக்கம் போல் வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 49.34 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 803 கன அடி.