Sunday, June 8, 2025
மாவட்ட செய்திகள்

துப்பாக்கி சுடும் போட்டியில் கல்லுாரி மாணவர்கள் சாதனை

உத்தமபாளையம் : மதுரை காமராஜ் பல்கலை கல்லூரிகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடும் போட்டியில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்.

மதுரை காமராஜ் பல்கலை கல்லூரிகளுக்கிடையேயான துப்பாக்கி சுடும் போட்டிகள் மதுரை ரைபிள் கிளப்பில் நடைபெற்றது.

போட்டிகளில் பெண்களுக்கான 50 மீட்டர் 3ம் நிலை துப்பாக்கி சுடும் பிரிவில் மாணவி கிருபா 2 ம் இடம் பிடித்தார்.

காற்று துப்பாக்கி சுடும் பிரிவில் மாணவி ஜீவ சக்தி இரண்டாம் இடத்தையும், ஏர் பிஸ்டல் சுடும் பிரிவில் ஹேமவர்ணா 3 ம் இடம் பெற்றார். ஆண்களுக்கான 50 மீட்டர் 3 ம் நிலை பிரிவில் சுமன் நான்காம் இடத்தையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரி தாளாளர் தர்வேஷ் முகைதீன், ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான், கல்லூரி முதல்வர் முகமது மீரான், உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *