Saturday, June 7, 2025
மாவட்ட செய்திகள்

அலைபேசி கடையில் திருட்டு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே அரிசிக்கடை பகுதியில் மஞ்சளாறு மெயின்ரோடைச் சேர்ந்த ஜியாவுதீன் 42. அலைபேசி கடை நடத்தி வந்தார்.

இரவில் கடையை பூட்டி மறுநாள் காலையில் திறக்க வந்தபோது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த 9 அலைபேசிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *