Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

சுருளி அருவியில் குளிக்க அனுமதி

கம்பம் : சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறைந்ததால், நேற்று காலை பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

சுருளி அருவியில் குளிக்க தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சபரிமலை சீசனில் கூட்டம் அதிகம் இருக்கும். அக்., நவ., அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அப்போது குளிக்க தடை விதிப்பது வழக்கம்.

ஆனால் ஒரிரண்டு நாட்களில் வெள்ளம் குறைந்து குளிக்க அனுமதி வழங்குவார்கள்.

இந்தாண்டு கடந்த டிச.,12 ம் தேதி முதல் மழை துவங்கியது. அன்று இரவு பெய்த பலத்த மழையால் டிச. 13 காலை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அருவி படிக்கட்டுகளிலும் வெள்ளம் ஓடியது. அன்று முதல் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று டிச. 17ல் அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால், பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் அருவியில் குளித்து செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *