Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பஸ் மோதியதில் முதியவர் பலி

தேனி, டிச. 21: தேனி அருகே அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கவுண்டர் மகன் ராமு(60). இவர் நேற்று முன்தினம் இரவு தேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலையில் நடந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது தேனி நோக்கி விரைவாக வந்த அரசு பஸ் முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து இறந்து போன முதியவர் ராமுவின் மகன் பாண்டியராஜன் அளித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் விபத்துக்கு காரணமான அரசு பஸ் டிரைவரான சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்த கருத்தபாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *