ஆறு கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது
தேனி : தேவாரம் சவுடம்மன் கோயில் தெரு மூர்த்தி 55, அதேப்பகுதி மூணாண்டிபட்டி கிழக்குத்தெரு முத்துப்பிச்சை 61. முருகன் 50, பேச்சியம்மன் கோயில் தெரு தினேஷ் 44, ஆகிய நால்வரும்டி.ரெங்நாதபுரம் சமுதாயக்கூடம் அருகே 4 கிலோ கஞ்சா வைத்து விற்பனை செய்ததனர். நால்வரையும் போலீசார் கைதுசெய்தனர்.
வருஷநாடு சிங்கராஜபுரம் ராமர் 41. குள்ளப்பக் கவுண்டன்பட்டி பிள்ளையார் கோயில் தெரு செந்தில்குமார் 45, ஆகிய இருவர் உத்தமபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே 4 கிலோ கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர். கைதான 6 பேர் தொடர் கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரியவந்தது. இதனால் 6 பேரையும் எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரயைில், கலெக்டர் ஷஜீவனா குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.