பெரியகுளத்தில் ஜன.12ல் ஆதார் மையம் செயல்படும்
தேனி : மாவட்டத்தில் ஐந்து தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் மையம் செயல்படுகிறது.
இங்கு புதிய ஆதார் பதிவு, பெயர், முகவரி திருத்தம், புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஞாயிறும் ஒரு நிரந்தர ஆதார் மையம் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஜன.,12ல் பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் உள்ள நிரந்தர ஆதார் மையம் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.