ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்
தேனி : தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசின் இலவச பொருட்களான பொங்கல் தொகுப்பு, வேட்டி, சேலை வழங்கும் பணி நாளை துவங்குகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் 4.27 லட்சம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை,ஒரு முழுகரும்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இவற்றுடன் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது. இதில் பச்சரிசி, சீனி, வேட்டி,சேலை ஆகியவை நுகர்பொருள் வாணிப கழக கோடவுன் களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. அதே போல் சின்னமனுார், கோட்டூர், தேவதானப்பட்டியில் விவசாயிகளிடமிருந்து செங்கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் கூறுகையில், சின்னமனுாரில் கொள்முதல் செய்யப்படும் செங்கரும்புகள் சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம், போடி பகுதிகளுக்கும், கோட்டூரில் இருந்து தேனிக்கும், தேவதானப்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் உள்ள கடைகளுக்கு அனுப்பபட்டு வருகிறது.
இன்று இரவுக்குள் 60 சதவீத பொங்கல் பொருட்கள், இலவச வேட்டி, சேலைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப படும் என்றனர்