பள்ளி மாணவர்கள் ஆதார் எண் புதுப்பிக்கும் பணி தீவிரம்
தேனி: பள்ளி மாணவர்களின் ஆதார் எண் புதுப்பிக்கும் பணிகளை மாவட்ட கல்வித்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்படுகிறது. பள்ளிப் படிப்பை முடித்த பின்னரும் அவர்களுக்கு உயர் கல்வியிலும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் பல மாணவர்கள் ஆதார் புதுப்பிக்காமலும், வங்கி கணக்குகளுடன் இணைக்காமலும் உள்ளனர். இப்பணியை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், ‘9, 10ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அரசு வழங்குகிறது. சிலர் திறனறித் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தேர்வாகி உயர்கல்வி படிக்கும் வரை உதவித்தொகை பெறுகின்றனர். சிலர் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காமலும், சிலர் ஆதார் புதுப்பிக்காமலும் உள்ளனர். ஆதார் இணைத்தல், புதுப்பித்தல் பணிக்காக வட்டாரம் வாரியாக பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி வருகிறோம்.’, என்றனர்.