எரியூட்டும் மயானம் பயன்பாட்டிற்கு அனுமதி
உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் ரூ.1.50 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட எரியூட்டும் மயானம் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேரூராட்சி அனுமதி அளித்துள்ளதால் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். விரிவாக்கப் பகுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நகருக்கு கிழக்குத் திசையில் முல்லைப் பெரியாற்றின் கரையில் பொது மயானம் உள்ளது. மக்கள் தொகை அதிகரித்து வருவதால், மயானத்தை விரிவாக்கம் செய்வதற்கு, பேரூராட்சி முடிவு செய்தது.
ரூ.1.50 கோடியில் எரியூட்டும் மயானம் கட்டப்பட்டது. மாவட்டத்தில் ஆண்டிபட்டி, உத்தமபாளையம் பேரூராட்சிகளில் மட்டுமே இந்த எரியூட்டும் மயானத்திற்கு அனுமதி கிடைத்தது.
உத்தமபாளையம் பொது மயானத்தில் மூன்று சிலிண்டர்களுடன் அமைக்கப்பட்ட எரியூட்டும் மயானம், தற்போது 6 சிலிண்டர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து ஒராண்டிற்கும் மேல் பூட்டி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது பல தரப்பிலிருந்து எழுந்த கோரிக்கைகளை ஏற்று, தொண்டு நிறுவனம் ஒன்று மூலம் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலர்கள் கூறுகையில், ‘தற்போது பொது மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ரூ.3500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.’, என்றன