பெரியகுளத்தில் இன்று ஆதார் மையம் செயல்படும்
தேனி, : மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மாநில அரசு சார்பில் நிரந்தர ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஞாயிறும் ஏதாவது ஓரு ஆதார் மையம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று(பிப்.,23) பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் அமைந்துள்ள ஆதார் மையம் செயல்படும்.
புதிய பதிவு, திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.