Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

மூன்று குவாரிகள் ரூ.13.99 கோடிக்கு ஏலம்

தேனி: மாவட்டத்தில் முதன் முறையாக மின்னனு ஏல முறையில் 3 குவாரிகள் ரூ.13.99 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் அரசு புறம்போக்கு, தனியார் நிலங்களில் பல்வேறு குவாரிகள் செயல்படுகின்றன.

இதில் அரசு புறம் போக்கில் செயல்படும் குவாரிகள் இதுவரை நேரடி ஏலம் மூலம் விடப்பட்டு வந்தது.

முதன் முறையாக மின்னனு முறையில் ஆண்டிபட்டி தாலுகா சண்முகசுந்தரபுரத்தில் 2, போடி தாலுகா கோடாங்கிபட்டியில் ஒன்று என மொத்தம் 3 குவாரிகள் ஏலம் விடப்பட்டன.

இந்த மூன்று குவாரிகள் ரூ.13.99 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *