சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்தவருக்கு 25 ஆண்டு சிறை
தேனி:தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்தவருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது
ஆண்டிபட்டி பகுதி கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் 53, என்பவர் 2023 ல் பாலியல் தொந்தரவு தந்தார். இதில் அவரை ராஜதானி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பரமசிவத்திற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.35 ஆயிரம் அபராதம், கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். அவருக்கான அபராதத்துடன் சேர்ந்து அச்சிறுமிக்கு இழப்பீடாக ரூ.6லட்சம் வழங்க வேண்டும். இதில் அவரின்கல்வி, மருத்துவ செலவிற்காக பெற்றோரிடம் தற்போது ரூ. 75ஆயிரம் வழங்கி, வங்கியில் ரூ. 5லட்சத்தை நிரந்தர வைப்பு நிதியாக வைத்து சிறுமி உரிய வயதை எட்டியதும் பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ரசீதா ஆஜரானார்.