பயன்பாடு இன்றி சேதம் அடைந்த சமுதாயக்கூடம்
தேவாரம்; தேவாரம் அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் சமுதாயகூடம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் பராமரிப்பு இன்றி கட்டடம் சேதம் அடைந்து உள்ளது.
சின்னமனூர் ஒன்றியம், பொட்டிப்புரம் ஊராட்சிக்கு உட்பட்டது ராமகிருஷ்ணாபுரம். 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மெயின் ரோட்டில் எம்.பி., தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பில் குடிநீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. உரிய பராமரிப்பு இன்றி சமுதாயக்கூட கட்டடம் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்து உள்ளது.
பகலில் மது அருந்தும் பாராகவும், இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக மாறி வருகிறது. சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சின்னமனூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.