தெரு மையத்தில் மின்கம்பம்
கூடலுார்; கூடலுார் 6வது வார்டு காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. தெருவின் நடுவில் மின்கம்பம் உள்ளதால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கடந்து செல்ல முடியவில்லை. அதனால் இரவு நேரங்களில் அவசரத் தேவைக்காக வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரியத்திடம் பலமுறை புகார் கூறியும் இதுவரை மாற்றி அமைக்க வில்லை. மின்கம்பம் இருந்த இடத்தில் நீங்கள் வீடு கட்டி உள்ளதாகவும், இதை அகற்ற மின்வாரியம் கூடுதல் தொகை கேட்பதாகவும் அப்பகுதி மக்கள் புலம்பினர்.