கனிம திருட்டு: ஒருவர் மீது வழக்கு
பெரியகுளம் : தென்கரை எஸ்.ஐ., மாரிமுத்து மற்றும் போலீசார் திண்டுக்கல் தேனி பைபாஸ் ரோடு, சருத்துப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
டிப்பர் லாரியை சோதனையிட்டதில் மூன்றரை டன் எம்.சான்ட் கிராவல் மண் அனுமதிபெறமால் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. லாரியை கைப்பற்றி டிரைவர் ஜெயக்கண்ணனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.